Friday, November 26, 2010

வாய்மைத் திருமகன்

0 comments
Thalaivar-birth-day2

தேசியத் தலைவா தேசியத் தலைவா!
தேசம் எழுதிய தீந்தமிழா!-கை
வீசிய வீச்சினில் வேங்கையின் மூச்சில்
விளைத்தனை ஈழம் பெருந்தலைவா! - தேசியத்


ஊர்க லடங்கிலும் உலக மடங்கிலும்
ஏர்முனைய யாக்கிய ஈழமகன்-ஈழம்
வாழும் உலகினை வார்ப்புகள் ஆக்கிய
வரலா றெழுதிய வண்ணமகன்! - தேசியத்


ஆகுதி யானவர் ஏகிக் களம்புக
வேதம் உரைத்திட்ட வித்துவனே-தமிழர்
சாகும் நிலையிலும் ஈழம் எழுதிடும்
சந்ததி கொடுத்தாய் தத்துவனே! -தேசியத்


காடு எரிந்தது ககனம் எரிந்தது
நாடு மறந்திலை நாயகனே-பெற்ற
வீடு உலவிய வெற்றித் திருமகள்
வீழ்ந்தும் மறந்திலை ஈழமதே! -தேசியத்


நீயொரு தலைவன் நீதான் தலைவன்
நீள்நிலம் எங்கும் நீயொருவன்-தமிழ்த்
தாயவள் தந்த தங்கத் தலைமகன்
சாயாத ஈழம் படைத்தமகன்! -தேசியத்


-புனிதன்

0 comments:

Post a Comment