Wednesday, January 5, 2011

தெய்வ மகனைத் திருநாட்டிற்குத் தந்தவரே!

1 comments
தை 6ம் நாள் மாதந்தை திரு வேலுப்பிள்ளை அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நாளாகும். அதன் பொருட்டு கனடாவிலிருந்து பவித்திரா எழுதிய கவிதை..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWYd5SuJ_VN9mR4H9_RQVMnBq8HrFifSOgrK4dKCnpIGaQu1DADMLg9jSOn6tjmaN5OaIEvh0tQlcWceqVdKY5UxU3msblGAHQiud9_aVbGnmNgIjRmyheK-uVCKVizgtDH-vBX-kHa_Z8/s1600/vel1.jpg
ஆண்டொன்று ஆனதையா அறிவுடைத் தந்தாய்
அவனியைப் பிரிந்துநீவீர் ஆண்டவன் பாதம்
வேண்டித்தான் சென்றீரே விலையில் மாண்பே
விடிவெமக்குத் தூரமில்லை விதியை நொந்தோம்
தாண்டிநாமும் செல்கின்றோம் தடைகள் நீக்கி
சார்புநெறி வகுத்திங்கு இயங்கு காலை
தூண்டிநிற்கும் நல்லறிவினைத் துணையாய்க்; கொண்டு
தூயதிரு வடிபோற்றிப் புனைந்தேன் பாடல்.

கலைமகளாம் எம்தெய்வம் கல்விக்கரசி யென்றும்
களிப்புடனே வீணையிற் கவிமழை பொழிந்திட
அலைமகளாள் நிலம்நோக்கி அகம்குளிர்ந்து நீரடித்து
ஆர்ப்பரிப்பிற்; றிளைத்து அணைத்து மகிழ்ந்திட
மலைமகளாள் மங்கலக் குங்குமமும் மனையும்
மாண்புடைத் திடமும் மேன்மையும் அளித்திட
விலையிலா வீரத்தின் விளைநிலமாய் விளங்கு
வள்ளல்நிறை பதியாம் வல்வைதந்த விறலே!

திருவேங்கடம் வேலுப்பிள் ளையெனத் திகழ்ந்து
சீர்மையுற வாழ்வினைச் செவ்வென நடத்தி
அரும்பெரும் சதிர்தனை அவனியொடு பொருதிய
ஆளுமைப் பேற்றின் அறிவுடை மூலமே!
திருவாசகம் தேவாரம் திருப்பல் லாண்டுநாளும்
தேனாக இசைத்திடு திருமனைத் தலையே!
தருமத்தின் இருப்பே! சான்றுயர் பெரியோனே!
தலைதாழ்த் தியும்தாள் பற்றினோம் ஐயா!

வெண்ணிற ஆடையில் விளங்கு நீறணிந்து
வேதாகம வழிகளில் விற்பனனாய் நின்று
கண்ணியமாய்க் கோவில்செல் காட்சிதனை ஊரார்
கண்களிற் பதித்துக் கையசைத்துக் களிப்புறுவர்
திண்ணிய ஞானத்தில் தெளிந்த சிந்தையில்
தேசுறு தோற்றத்தில் திகழ்திரு வேங்கடரே!
ஏண்ணத்தில் நிறைந்தீர்கள் இவ்வுல குள்ளவரை
இறவாத் தமிழோடு எஞ்ஞான்றும் கலந்திருப்பீh!

நிர்வாக சேவையிற் காணியதி காரியாய்
நீடுபணியாற் றியேழை நெஞ்சங்களை வென்றீர்!
கருமத்திற் கண்ணாகக் கடமை வீரனாகக்
கருணையின் வடிவாக எளிமையின் இருப்பாக
உரையிலே உண்மையும் உறுதியும் உவப்பும்
ஒன்றாகப் பிணைந்து ஒழுக்கத்தை ஓம்பும்.
கரையிட்ட வேட்டியும் காக்கிக்காற் சட்டையும்
கசடறக் கற்றோர் தகமையைக் காட்டும்!

பார்வதி மணாளனே! பக்தியின் திருவுருவே!
பாரதத்;; தலமாம் சிதம்பர வளர்ச்சிக்காய்
ஆர்க்குமிலா உள்ளத்தில் வள்ளலாய் விளங்கி
ஈய்ந்தீரே நிலபுலன் இமயமென உயர்ந்தீரே!
நேர்மையில் நெஞ்சுரத்தில் நின்மகன் நிர்மலனின்
நீண்ட வரலாற்றிற்; பிணைந்த பெருந்தகையே!
பார்போற்றும் பகலவன் கரிகாலன் சேயோனைப்
பெற்றதனாற் சிவனென்றே உமைநா மறிந்தோம்!

தந்தையே! ஏந்தைக்கு நிகரான சான்றோனே!
தானையிற் தனையனுடன் சார்ந்தி ருந்து
முந்திச்செய் தவப்பேறால் ஈன்று புறம்தந்த
முதல்வன்தன் திறமைகளை மெச்சி மகிழ்ந்தீரே!
கந்தகச் சூழலிலும் கலங்கா உள்ளத்தில்
கயவர் முன்சென்று தந்தையென விளித்தீரே!
அந்திமப் பொழுதினிலும் அடங்காப் புலியென
அரசினர்க்குப் பணியாது இன்னுயிர் துறந்தீரே!

வெற்றித் திருமகன் வகுத்த பாதையில்
வீறுடன் தமிழினம் ஏழுந்து நிற்கிறது!
பற்றியுள்ள பகைநீக்கப் புலம்பெயர் இளந்தலை
போராடி நிமிர்கிறார் புறப்படுவார் தாயகம்!
கற்றிடும் கல்வியெலாம் காணும் ஈழத்தின்
கவினுறு வளர்ச்சிக்குக் கொடையென அளிப்பரே!
உற்ற துணையென உண்மையில் திண்மையில்
உழைத்திட என்றும் வாழ்த்தி நிற்பீரே!

தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே!
தேடுகிறோம் செல்வனை! தூதுநீர் செல்வீரே!
பையவே வாழ்விடம் சென்றங்கு பரிதியிடம்
பக்குவமாய் எடுத்துரைத்து விரைந்திடச் செய்திடுக!
ஐயஎம் விடுதலைக்காய் ஆன்றவும் குடும்பத்தின்
ஈகையை ஒருபோதும் உள்ளத்தில் மறவோம்
வையகத்தில் நின்பெருமை வார்த்தையில் நிறைவுறா
வானகத்திலும் வியத்தகு வாழ்வினையே பெறுவீர்!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEix9z_vMZSkRGi2V5y7wYa6C3RLtyToCw9L3ppLnoaoDAEZhMKBDVri4Z2V7OLdTy0yfQz44KOJHayDMfIQy-80kE3y7Bc27Ll6t4kIUt5zGb4J22ca5Q_h3Gz0KaTkeeCLe5cPhUydmvof/s1600/vel2.jpg
கனடாவிலிருந்து பவித்திரா
அலைகள்

Monday, January 3, 2011

என் செல்வமே உறங்கு.. உன் அண்ணன் இன்னும் சாகவில்லை….!

1 comments
http://www.alaikal.com/news/wp-content/kavi-flash.jpgஅன்புத்தங்கையே இசைப்பிரியாவே..
உன் உரிந்தமேனியைக் காட்டி
உழுத்துப் போன உலகம்
போர்க்குற்றம் பேச வந்திருக்கிறது..
கோபப்படாதே என்
குலக்கொழுந்தே கொஞ்சம் கேள்..!

என் இரத்தத்தின் இரத்தமே..
என் தமிழ் உதிரக்கொடியில்
ஒட்டிப் பிறந்த ஒரேயொரு உறவே..!

உன் மார்பகங்களை விலத்தி…
பெண்குறியை மூடும் ஆடையை நீக்கி
சிங்கள இராணுவப் பேய் முகர்ந்தபோது.. நீ
பிணமாய்க்கிடந்தாய்…
என் தங்கையே
பிணத்தைப் புணரும்
சிங்களப் பேய்களை
இரத்தம் வழியும் கண்களால்
பார்த்துக் கொண்டிருக்கிறான்..
உன் அண்ணன்..
தாயே
இதுவா பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ?
இதைக்காட்டியா யுத்தக் குற்றத்திற்கு
தீர்ப்பெழுதப் போகிறான்..?

அம்மா அன்று
தமிழ்த்தாயை உருவமாய் வரைந்தோம்
ஐம்பெரும் காவியங்களை அவள்
ஆபரணமாய் மாட்டினோம்.
அது தெரியாது..
நாம் போற்றி வளர்த்த தமிழ்த்தாய்
எங்கே என்பார் மூடர்கள்..
தாயே..
அது நீதான் என்பதை
இன்றுவரை அறியான் நம்
தமிழ் மூடன்..!
தாயே இன்று
நீ கிடக்கும் கோலமே
என்னைப் பெற்றாளே அந்தத்
தமிழ்த்தாய்
அவள் கிடக்கும் கோலம் அம்மா..

குழந்தை பெற்ற வலி மாறாத
உன் புண்ணான உடலை
குதறிய நாய்களை
மறக்கச் சொல்கிறான்..
அவனுடன் உறவு கொள்வதே
அபிவிருத்திக்கு ஒரே வழி என்கிறான்
என் இனத்தில் பிறந்த
தேர்தல் நாய்..

என் உடன்பிறப்பே..
உதிரத்தின் உதிரமே உன்
உடலம் கிடக்கும் காட்சியைப்
பார்த்த அண்ணன்
உன்னை அழித்தவன் தரும்
பாயில் படுத்துறங்குவானா ?
எண்ணிப்பார்…?

தமிழ் தமிழென முழங்கும்
தமிழகத்து தறுதலைகளை
அண்ணாவென நம்பி
அலறினாயே
உன் குரல் கேட்டு
கடவுளே ஓடிப் போனான்
ஈழத்தை விட்டு..
தெருவுக்கு தெரு வைப்பாட்டி வைத்து
தினமொரு கதை பேசுவோனால்
வேறென்ன முடியும் தாயே..
தூ..
வேண்டாம் விடு
இதைவிட வேசி வீடு போய்
விடுதலை கேட்கலாம் தாயே..

கரையற்ற கடலைப் பார்த்து
நம்பிக்கை குலைந்து கலகம் செய்த
கொலம்பஸ் கப்பலில் பயணித்த
கோழை மாலுமிகள் போல் இன்று
நம்மினத்திலும் மூடர்கள் மலிந்தனர்
அதுதான்
உன் மரணம் பார்த்தபின்னும் தன்
கடமை உணராது..
ஆளையாள் அடிபடுகிறான்
அடுத்த கப்பலையும் ஆழ்கடலில்
தாழ்க்க முயல்கிறான்..

இதைப்பார்த்த மற்றவன்
இப்படியும் ஓர் இனமென்கிறான்..
இனியென்ன என்ற
இழவு விழுந்த கேள்வியையே
இருபத்து நாலு மணிநேரமும்
ஓய்வின்றிக் கேட்கிறான்..

உன் முகத்தைப் பார்த்த அண்ணன்
உள்ளத்தில் என்ன பதில் வரும்..
தாயே உன் பிணத்தை விற்று
தமிழனுக்கு ஒரு விடிவென்றால்
ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும்
அந்த விடிவு
வேண்டாம் தாயே..!
உன்னை விற்று விடிவு பேசும்
நாயின் படலைக்கு உன்
அண்ணன் போனால்
ஒரு வேசி மகன் செத்துவிட்டானென்று
அவன் பிணத்தை
வீதியில் போட்டு கொழுத்து தாயே !

மானமுள்ள ஒவ்வொரு அண்ணனுக்கும்
இசைப்பிரியா தங்கை..!
மானமுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும்
இசைப்பிரியா தாய்..!
மானமுள்ள தமிழினத்தின்
ஒரேயொரு தேசியக் கொள்கை
இசைப்பிரியா.. !
எங்கள் தேசியக் கொடியின் தேவதை
இசைப்பிரியா..
தங்கையே..!
அநாதையாய் கிடக்கும்
உன் பூவுடலைத் தூக்கி
ஐயோ என் தங்கையே..! என்று
அழுதபடி
கொள்ளி வைக்கிறேன்..
தாயே என்னை நம்பு
தாயே !
என் தங்கையே.. !
உன் பூவுடல் நோகக்கூடாதென்று
வாழைத்தண்டில் வழத்தி
ஈழத்தமிழால் தீ மூட்டுகிறேன்..
என் செல்வமே உறங்கு.. உன்
அண்ணன் இன்னும்
சாகவில்லை….!

அண்ணன் 03.01.2011