Monday, November 29, 2010

மாவீரர் உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்…..

0 comments

உலகையே வியக்கவைத்த
எங்கள் உன்னத வீரர்கள்…..

சரித்திரங்கள் பலபடைத்த
சாதனைச் சிகரங்கள்…..

மலைகளைப் பிழந்து
தமிழன் வீரம் சொன்னவர்கள்….
உலகையே எதிர்த்து நின்று
எங்கள் உரிமையைக் கேட்டவர்கள்…
உலகச் சதிகளினால்
மண்ணுக்கு இரத்தம் தந்த வேங்கைகள்….
இறந்தும் நம் மானம் காக்கும்
தமிழினத்தின் வித்துக்கள்….

ஒன்றல்ல இரண்டல்ல
முப்பத்தையாயிரத்துக்கு மேல்
தங்கள் மூச்சுக்களைத் திறந்து
எங்களை மூச்சடைக்க வைத்தவர்கள்….

வியூகம் உடைக்க
வாவென்று அழைக்கு முன்னே..
வரிசையில் முதல் சென்ற
வரலாற்று நாயகர்கள்….

சுய நலம் நீங்கி
பொது நலம் தாங்கி…
விடுதலையே மேலோங்கி ; அதற்காய்
மரணித்த வீரர்கள்…..

தாய்ப்பாசத்தை விலக்கி வைத்து…
விடுதலையை சிரசில் வைத்து…
அந்த ஒன்றையே சிந்தித்து….
எங்கள் மனங்களெல்லாம்
உரம் தூவிச் சென்றவர்கள்….

அவர் ஆசைப்பட்ட ஓர் உடை
போராளிக்கான சீருடை….
விரும்பிய ஆபரணம்
கழுத்தில் தொங்கிய ஓர் மரணம்….
எங்கள் நிம்மதித் தூக்கத்திற்காய்
தங்கள் நித்திரை கலைத்தவர்கள்….
நிலம் காடு மேடெல்லாம்
படுக்கையாய் கொண்டவர்கள்….

மானிட உருவில் வந்த
தமிழின் மானம் நீங்கள்…..
விடுதலைக் கனவை மட்டுமல்ல
வேதனையின் சிலுவை பல சுமந்தீர்கள்…
மரித்தாலும் உயிர்த்து எழ
நீங்கள் பரமபிரான் ஜேசுவல்ல….
மரணத்தை நிரந்தரமாக்கிக் கொண்ட
எங்கள் தமிழீழத்தின் சிசுக்கள்…

கார்த்திகை இருபத்தியேழு
உம் கல்லறையை வணங்கிடும் நாள்….
கார்த்திகை பூவினால்
உங்கள் கல்லறை நிரப்பிடும் நாள்…
மாவீரர் இல்லங்களில்
தீபங்கள் ஏற்றிடும் நாள்..
எம் மனமும் உன் ஆன்மாவும்
கண்ணீர் பூக்களால் பேசிடும் நாள்…

உம் லட்சியம் வெல்வோம்
இதை இன்று சத்தியமாய் கொள்வோம்..
உன் சாவின் கனவுகளை
நிறைவேற்ற சபதங்க் கொள்வோம்…

Friday, November 26, 2010

வாய்மைத் திருமகன்

0 comments
Thalaivar-birth-day2

தேசியத் தலைவா தேசியத் தலைவா!
தேசம் எழுதிய தீந்தமிழா!-கை
வீசிய வீச்சினில் வேங்கையின் மூச்சில்
விளைத்தனை ஈழம் பெருந்தலைவா! - தேசியத்


ஊர்க லடங்கிலும் உலக மடங்கிலும்
ஏர்முனைய யாக்கிய ஈழமகன்-ஈழம்
வாழும் உலகினை வார்ப்புகள் ஆக்கிய
வரலா றெழுதிய வண்ணமகன்! - தேசியத்


ஆகுதி யானவர் ஏகிக் களம்புக
வேதம் உரைத்திட்ட வித்துவனே-தமிழர்
சாகும் நிலையிலும் ஈழம் எழுதிடும்
சந்ததி கொடுத்தாய் தத்துவனே! -தேசியத்


காடு எரிந்தது ககனம் எரிந்தது
நாடு மறந்திலை நாயகனே-பெற்ற
வீடு உலவிய வெற்றித் திருமகள்
வீழ்ந்தும் மறந்திலை ஈழமதே! -தேசியத்


நீயொரு தலைவன் நீதான் தலைவன்
நீள்நிலம் எங்கும் நீயொருவன்-தமிழ்த்
தாயவள் தந்த தங்கத் தலைமகன்
சாயாத ஈழம் படைத்தமகன்! -தேசியத்


-புனிதன்

தமிழ் அன்னை தலை நிமிர்த்த வந்த நாயகனே

0 comments

ஆழ் கடல் சீறி ஓங்கும் வாவிதனும் சீர்திலங்கும்
சீர் மிகு ஈழத்தின் வல்வை பெற்றெடுத்த நேர்மிகு தலைவன் தோன்றினான்
தமிழ் அன்னை தலை நிமிர்த்த வந்த நாயகனே
தமிழைக்காத்து வரலாறு எழுதிய தாயகனே

பட்டாம் பூச்சி பிடிக்கும் பதினாறுகளில்
பகை மிரட்டி பகை விரட்ட உன்னால் மட்டும் முடிந்ததன்றோ

எம் இனத் தோன்றலே என்றும் நீ மாதீரனே
கார்த்திகை மைந்தனே ஈழத்தின் காரிருள் நீக்க வந்த கதிரொளியே

தாளாது சிறிதும் சாயாது வீரப் புலியாய் துணிந்தே விரைந்தாய்
பெரும் மாயக் கொடியர் கொடும் வதைதனை உடைத்தாய்
செந்தமிழ்த்தாய் தேச விலாசம்தனை நீயே தந்தாய்

தலைவா எண்ணெழு அகவை தொட்டுவிடிலும்
என்றும் தமிழர் அக அவைதனில் துடிப்பு மிகு இளவரசன் நீர்
ஈழத்தலை மகனுக்கு ஆகியதாம் அகவை எண்ணெழு
அகவை 100 ஆயினும் அவன் மிடுக்கு குறைவதுதான் ஏது

சரித்திரத்தில் எட்டப்பனால் அழிந்தான் செந்தமிழன்
விசித்திரம் என்னவென்றால் கரிகாலன் மதியுகத்தால்

இனி இல்லை என்றும் கலியுகம் நாளை எங்கும் ஆகுமே புலியுகம்

தமிழர்கள் யாவரும் தம் கருவில் சுமக்கும் தமிழீழம்
நாளை விடுதலையாய் பிரசவிக்கும் உன்னாலே
வரலாற்றினை வளமாக்கி தமிழ் மானம் தனை காக்க வந்தவனே
இனியும் பல்லாண்டு பல்லாண்டு புகழ்மாலை சூடிடுவாய் எம் தலைவா

தமிழ் இளையோர் அமைப்பு

ஐக்கிய ராச்சியம்

56 வது அகவை காணும் அண்ணா, நீங்கள் ஆயிரம் கோடி காலம் வாழ்க

0 comments

56 வது அகவை காணும் அண்ணா, நீங்கள் ஆயிரம் கோடி காலம் வாழ்க,
நீங்கள் பிறந்ததனால் உயிர் பெற்றது தமிழினம், உயர்வு பெற்றது தமிழினம்,
உங்கள் பிறந்தநாளே தமிழரின் தை திருநாள் அண்ணா. நீங்கள் வாழ்க பல்லாண்டு

இருண்டு கிடந்த தமிழினத்துக்கு வெளிச்சம் தந்தவர் நீங்கள் அண்ணா, கண்ணெதிரே தெய்வங்களை கண்டதில்லை தமிழினம், ஆனால் முதன் முதல் தோன்றிய தெய்வம் அண்ணா நீங்கள், பல அரசர்களையும் தலைவர்களையும் கண்டது தமிழினம், ஆனால் முதன் முதலாக முப்படையையும் கண்ட தலைவர் அல்லவா நீங்கள் அண்ணா.

தாயுடன் அதிக காலம் இருந்தவர் இல்லை அண்ணா நீங்கள், உங்களுக்கு பின்னால் அணிதிரண்ட அனைத்து பிள்ளைகளுக்கும் தாய் அண்ணா நீங்கள். தமிழீழத்தின் சாணைத் தலைவர் அண்ணா நீங்கள்.

உலகத் தமிழினமே பெருமை பெற்றது உங்களை தலைவராக பெற்றதிற்கு, தமிழ்த்தாயே பெருமை பெற்றாள் உங்களை பிள்ளையாக பெற்றதிற்கு, வானில் பலகோடி நட்சத்திரம் உண்டு ஆனால் கதிரவன் நீயன்னா.

விலை போகாத வீரம், அடி பணியாத பேச்சு, மண்டியிடாத மானம் உங்களிடமே கற்றது தமிழினம், பிறந்த குழந்தை கூட வீரத்தின் நாமமாக உங்கள் பெயரையே உச்சரிக்கின்றது, உலகத் தலைவர்கள் அனைவரும் அணி திரண்டார்கள் உண்மை தலைவர் என்ற உங்களை பார்ப்பதற்கு, பெருமை கொள்கின்றோம் அண்ணா. வாடிய மலர்கள் கூட வாசம் வீசும் உங்கள் புன்னகை பார்த்தால் அண்ணா.

நிச்சயமாக உங்களின் காலத்திலேயே தமிழீழம் மலரும் அது உறுதி அண்ணா.

56 வது அகவை காணும் அண்ணா உங்களுக்கு

தமிழ் இளையோர் அமைப்பின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Tuesday, November 23, 2010

தமிழ்ச் சூரியேனே நீ வாழி! வாழி!!

0 comments


சேற்றுநிலச் செழுங்கமலப் பூவே வாழ்விற்
செந்தமிழே உயிராமென் றறைந்த கோவே
நாற்றிசையும் எழில்சிந்தும் பொதிகைக் காவின்
நறும்வாசச் சந்தனமே! நிலம்தீ நீர்வான்
காற்றென்றும் ஐம்பூத வடிவம் தாங்கிக்
காலப்போர் புரிந்ததமிழ் மறவர் தேவே!
மாற்றில்லாப் பசும்பொன்னாய் மிளிரும் ஈழ
மக்கள்தம் மன்னவனே வாழி! வாழி!!

பூவெல்லாம் நின்மாண்பு சொல்லுமா போல்
புதுவிதழ்கள் மிகவிரித்து எழிலாய் நிற்கும்!
நாவெல்லாம் நின்னாற்றல் பேசிப் பேசி
நயன்சொல்லும்! நம்கவிஞர்; யாக்கும் இன்பப்
பாவெல்லாம் பைந்தமிழர் தலைவ நின்னை
பல்லூழி வாழ்கவெனும் தமிழீழத்துக்
காவெல்லாம் உறைவிலங்கு புட்கள் யாவும்
கரிகாலன் பேரிற்பல் லாண்டு பாடும்!

குட்டுகின்ற போதெல்லாம் குனிந்து கூப்பிக்
கும்பிட்ட நிலைமாற்றி வைத்தோய் வாழி!
வெட்டுக்கு வெட்டென்று பதில்கொ டுத்த
வேங்கைமா மன்னவனே வாழி! வாழி!!
இட்டசிறு பிச்சையினை இருகை நீட்டி
இரந்துண்டு வாழந்திட்ட இனத்தில் வந்த
மொட்டவிழ்ந்து மணம்வீசும் மலர்போல் நெஞசின்
மாதலைவ மண்ணினிலே நீடு வாழி!

செந்தமிழர் ஆயிரமாம் ஆண்டு செய்த
செழுந்தவத்தின் பெரும்பயனாய் வாய்த்தாய் வாழி!
வந்திறங்கி வானிருந்து வளம்பெ ருக்கும்
வண்டமிழர் கங்கைநதி போல்வாய் வாழி!
மந்தையிலை மறத்தமிழர் நாமென் றீன
மாற்றர்க்குப் பெரும்பாடம் சொன்னாய் வாழி!
அந்தமில்சீர் தமிழீழ அணியார் நாட்டின்
சூரியனே நீவாழி! தமிழும் வாழி!!

Monday, November 22, 2010

கை மலர்கொண்டு கார்த்திகை மலர்களை பூசிக்க வாருங்கள்

1 comments
காத்திருந்து காத்திருந்து கார்த்திகை வந்ததும்
கார்த்திகைமலராய் பூத்திருந்து எமை பார்த்திருக்கும்-எம்
கார்த்திகை மலர்களை கைதொழ வாருங்கள் -உங்கள்
கைமலர் கொண்டு வையகம் எங்கிலும் வாழும்தமிழரே
கார்த்திகைமலர்களை பூசிக்க வாருங்கள்

ஈழம்மலரும் வேளையிலே - தம்
இதயதாகம் தீர்ந்ததென
ஈழத்தாயினை வாழ்த்திடவே
கல்லறையில் கண்விழித்துக் காத்திருக்கும்
எம்காவல் தெய்வங்களை போற்றிடவே வாருங்கள்
போற்றியே போற்றியே தீபம் ஏற்றிட வாருங்கள்.

ஏற்றிவைக்கும் தீபத்தின் ஒளியாய் நின்று
எம்மினத்தின் இருளகற்றி ஓளியேற்ற வேண்டி
போற்றிடவே வாருங்கள் கண்ணீர்ப்பூக்கள் தூவி
கரம் கூப்பிட வாருங்கள் - கரம் கூப்பிட வாருங்கள்

கல்லறைத் தெய்வங்களின் புனிதம் போற்றி -அதை
காணும் எம் மனங்களிலே மனிதம் ஏற்று
அல்லல்கள் அவலங்கள் அனைத்தும் வெல்ல
அகிலத்தில் வாழும் தமிழர்களே அன்பால் இணைந்து
ஒன்றுகூடியே வாருங்கள் கை ஒன்று சேரவே வாருங்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIQp3iGidEnMtVjv18PlbhgeynpFi50mnKPdIpJ5CSJZISuyJfrxLxFzgrmcKLIWgO9IPwczoq8wTsCjQW4UxQ4WOlv3kAnNTy0i7LTj5K7eikRwZJ9banFuhl6qaUUy5GCfAHTGBZBoi6/s1600/maaverar.jpg