Wednesday, December 8, 2010

அகவை அய்ம்பத்தாறு கண்ட அற்புத தலைவன்

0 comments
அகவை அய்ம்பத்தாறு கண்ட அற்புத தலைவன் - நீ
உலக தமிழர்களின் உன்னத தலைவன் - நீ
தமிழனின் அடிமைத் தடைகளை தகர்த்தெறிந்து
தனி நாடு கண்ட வீரத் தலைவன் நீ

புறநானூற்றின் போர்படையாம் புலிப் படையை - நீ
அமைத்து தமிழீழம் அமைத்து வெற்றிக் கண்டாய்
தமிழீழத்தில் அஞ்சா நெஞ்சமும் வீரமும் தீரமும் கொண்ட
அருந்தமிழர் கூட்டம் உன் படையில் அதை
புறநானூற்றின் தமிழர் வீரர் தன்னை
உலகிற்கு உணர்த்திய உன்னத எம் தலைவா

வெஞசமர் புரிந்து தமிழர் பகைவரை வீழ்த்தினாய்
சிங்கமென்ற சிங்களவனை சிறுநரியாய் ஆக்கினாய்
கொரில்லா போர்படை வியுகம் அமைத்து
ஆணவ சிங்களவனை நீ அழித்தாய்
உலகின் முதல் மனிதனாம் தமிழனுக்கு
கல் தோன்றிய மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய
மூத்த குடிக்கு தனி நாடு கண்டு தமிழீழம் அமைத்தாய்

ஆணிற்கு பெண் சமமென்னும் சங்க தமிழனின்
கொள்கையை உலகிற்கு உணர்த்திய உன்னத தலைவன் நீ
உலகத் தமிழனின் எட்டப்பனாம் கலைஞரின் சூழ்ச்சியால்
இத்தாலி சோனியாவின் இந்தியப் படைகளும் ஆயுதங்களும்
சீனாவும் பாகிஸ்தானும் ஜப்பானும் ரஷ்யாவும் சேர்ந்து
உன்னை சுற்றி வளைத்து தாக்கியப் போரில்
புலியாய் தப்பி தமிழரின் விடுதலை வேட்கையை
உன் தம்பி சீமானிடம் விட்டு சென்ற எம்தலைவா

இன்று உன்னோடு துணை நிற்க நாம் தமிழர் அமைப்பை
உருவாக்கி தந்து விட்டான் உன் தம்பி சீமான்
காத்திருக்கிறோம் உன்வரவிற்க்காக நீ புலியென பாய்ந்து
வெளி வரும் நாள் எந்நாளோ !!!

தமிழ் தேவன் (நாம் தமிழர்)

0 comments:

Post a Comment