
சீர் மிகு ஈழத்தின் வல்வை பெற்றெடுத்த நேர்மிகு தலைவன் தோன்றினான்
தமிழ் அன்னை தலை நிமிர்த்த வந்த நாயகனே
தமிழைக்காத்து வரலாறு எழுதிய தாயகனே
பட்டாம் பூச்சி பிடிக்கும் பதினாறுகளில்
பகை மிரட்டி பகை விரட்ட உன்னால் மட்டும் முடிந்ததன்றோ
எம் இனத் தோன்றலே என்றும் நீ மாதீரனே
கார்த்திகை மைந்தனே ஈழத்தின் காரிருள் நீக்க வந்த கதிரொளியே
தாளாது சிறிதும் சாயாது வீரப் புலியாய் துணிந்தே விரைந்தாய்
பெரும் மாயக் கொடியர் கொடும் வதைதனை உடைத்தாய்
செந்தமிழ்த்தாய் தேச விலாசம்தனை நீயே தந்தாய்
தலைவா எண்ணெழு அகவை தொட்டுவிடிலும்
என்றும் தமிழர் அக அவைதனில் துடிப்பு மிகு இளவரசன் நீர்
ஈழத்தலை மகனுக்கு ஆகியதாம் அகவை எண்ணெழு
அகவை 100 ஆயினும் அவன் மிடுக்கு குறைவதுதான் ஏது
சரித்திரத்தில் எட்டப்பனால் அழிந்தான் செந்தமிழன்
விசித்திரம் என்னவென்றால் கரிகாலன் மதியுகத்தால்
இனி இல்லை என்றும் கலியுகம் நாளை எங்கும் ஆகுமே புலியுகம்
தமிழர்கள் யாவரும் தம் கருவில் சுமக்கும் தமிழீழம்
நாளை விடுதலையாய் பிரசவிக்கும் உன்னாலே
வரலாற்றினை வளமாக்கி தமிழ் மானம் தனை காக்க வந்தவனே
இனியும் பல்லாண்டு பல்லாண்டு புகழ்மாலை சூடிடுவாய் எம் தலைவா
தமிழ் இளையோர் அமைப்பு
ஐக்கிய ராச்சியம்
0 comments:
Post a Comment