
இன்று (22.03.2011)அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே!நேரிசை வெண்பாஅன்னையே! நாம்வணங்கும் ஆலயமே! அன்புருவே!நின்னையே எந்நாளும்; நெஞ்சினில் – உன்னததெய்வமாய்த் தாங்கித் திருவிளக் கேற்றினோம்செய்யதிரு சேயோன் செயல்!பருத்தித் துறையெனும் பாங்கான ஊரில்மருவுதமிழ் மேவு மனையாம் – தருமம்இயற்றுநல் மெத்தைவீட் டில்லறம் தன்னில்வியத்தகு சேயானாய் வீறு!வெற்றித் திருநகராம் வேலவன் வாழ்விடமாம்கற்றவர் சார்பு கவின்பொழில் – நற்றுயர்வேதம் ஒலித்திடு வீதி; நிறைமனைப்பாதம் பதித்தாய் பயன்!நாற்குணமும் நன்றே நடைபயிலச் செல்வந்தமேற்குடியிற்...