Showing posts with label மாவீரர் நாள். Show all posts
Showing posts with label மாவீரர் நாள். Show all posts

Monday, November 29, 2010

மாவீரர் உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்…..

0 comments

உலகையே வியக்கவைத்த
எங்கள் உன்னத வீரர்கள்…..

சரித்திரங்கள் பலபடைத்த
சாதனைச் சிகரங்கள்…..

மலைகளைப் பிழந்து
தமிழன் வீரம் சொன்னவர்கள்….
உலகையே எதிர்த்து நின்று
எங்கள் உரிமையைக் கேட்டவர்கள்…
உலகச் சதிகளினால்
மண்ணுக்கு இரத்தம் தந்த வேங்கைகள்….
இறந்தும் நம் மானம் காக்கும்
தமிழினத்தின் வித்துக்கள்….

ஒன்றல்ல இரண்டல்ல
முப்பத்தையாயிரத்துக்கு மேல்
தங்கள் மூச்சுக்களைத் திறந்து
எங்களை மூச்சடைக்க வைத்தவர்கள்….

வியூகம் உடைக்க
வாவென்று அழைக்கு முன்னே..
வரிசையில் முதல் சென்ற
வரலாற்று நாயகர்கள்….

சுய நலம் நீங்கி
பொது நலம் தாங்கி…
விடுதலையே மேலோங்கி ; அதற்காய்
மரணித்த வீரர்கள்…..

தாய்ப்பாசத்தை விலக்கி வைத்து…
விடுதலையை சிரசில் வைத்து…
அந்த ஒன்றையே சிந்தித்து….
எங்கள் மனங்களெல்லாம்
உரம் தூவிச் சென்றவர்கள்….

அவர் ஆசைப்பட்ட ஓர் உடை
போராளிக்கான சீருடை….
விரும்பிய ஆபரணம்
கழுத்தில் தொங்கிய ஓர் மரணம்….
எங்கள் நிம்மதித் தூக்கத்திற்காய்
தங்கள் நித்திரை கலைத்தவர்கள்….
நிலம் காடு மேடெல்லாம்
படுக்கையாய் கொண்டவர்கள்….

மானிட உருவில் வந்த
தமிழின் மானம் நீங்கள்…..
விடுதலைக் கனவை மட்டுமல்ல
வேதனையின் சிலுவை பல சுமந்தீர்கள்…
மரித்தாலும் உயிர்த்து எழ
நீங்கள் பரமபிரான் ஜேசுவல்ல….
மரணத்தை நிரந்தரமாக்கிக் கொண்ட
எங்கள் தமிழீழத்தின் சிசுக்கள்…

கார்த்திகை இருபத்தியேழு
உம் கல்லறையை வணங்கிடும் நாள்….
கார்த்திகை பூவினால்
உங்கள் கல்லறை நிரப்பிடும் நாள்…
மாவீரர் இல்லங்களில்
தீபங்கள் ஏற்றிடும் நாள்..
எம் மனமும் உன் ஆன்மாவும்
கண்ணீர் பூக்களால் பேசிடும் நாள்…

உம் லட்சியம் வெல்வோம்
இதை இன்று சத்தியமாய் கொள்வோம்..
உன் சாவின் கனவுகளை
நிறைவேற்ற சபதங்க் கொள்வோம்…

Monday, November 22, 2010

கை மலர்கொண்டு கார்த்திகை மலர்களை பூசிக்க வாருங்கள்

1 comments
காத்திருந்து காத்திருந்து கார்த்திகை வந்ததும்
கார்த்திகைமலராய் பூத்திருந்து எமை பார்த்திருக்கும்-எம்
கார்த்திகை மலர்களை கைதொழ வாருங்கள் -உங்கள்
கைமலர் கொண்டு வையகம் எங்கிலும் வாழும்தமிழரே
கார்த்திகைமலர்களை பூசிக்க வாருங்கள்

ஈழம்மலரும் வேளையிலே - தம்
இதயதாகம் தீர்ந்ததென
ஈழத்தாயினை வாழ்த்திடவே
கல்லறையில் கண்விழித்துக் காத்திருக்கும்
எம்காவல் தெய்வங்களை போற்றிடவே வாருங்கள்
போற்றியே போற்றியே தீபம் ஏற்றிட வாருங்கள்.

ஏற்றிவைக்கும் தீபத்தின் ஒளியாய் நின்று
எம்மினத்தின் இருளகற்றி ஓளியேற்ற வேண்டி
போற்றிடவே வாருங்கள் கண்ணீர்ப்பூக்கள் தூவி
கரம் கூப்பிட வாருங்கள் - கரம் கூப்பிட வாருங்கள்

கல்லறைத் தெய்வங்களின் புனிதம் போற்றி -அதை
காணும் எம் மனங்களிலே மனிதம் ஏற்று
அல்லல்கள் அவலங்கள் அனைத்தும் வெல்ல
அகிலத்தில் வாழும் தமிழர்களே அன்பால் இணைந்து
ஒன்றுகூடியே வாருங்கள் கை ஒன்று சேரவே வாருங்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIQp3iGidEnMtVjv18PlbhgeynpFi50mnKPdIpJ5CSJZISuyJfrxLxFzgrmcKLIWgO9IPwczoq8wTsCjQW4UxQ4WOlv3kAnNTy0i7LTj5K7eikRwZJ9banFuhl6qaUUy5GCfAHTGBZBoi6/s1600/maaverar.jpg